Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நெகமம் அருகே கரிவரதராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையத்தில் மழை வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2019
02:05

கோவில்பாளையம்:மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம் நடந்தது.தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கோடை வாட்டி வதைக்கிறது. நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பிரசித்தி பெற்ற கோவில்களில் மழை வேண்டி யாகம் மற்றும் வருண ஜபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி சிவாலயங்களில் மழை வேண்டி வேள்விகள் நடைபெற்று வருகிறது. அதே போல் பெருமாள் கோவில்களிலும் யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நேற்று (மே., 7ல்), மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் காலை 7:00 மணிக்கு வர்ண சூக்த காயத்ரி ஹோமம் நடந்தது.

வெங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியரோடு அருள்பாலித்தார். அப்போது ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும் பாடலை பாராயணம் செய்தனர்.

சாற்றுமுறைக்கு பின் சிறப்பு பூஜை நடந்தது.அமிர்த்வர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ராகத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் நேற்று (மே., 7ல்)மாலை மொண்டி பாளையத்திற்கு மேற்கு பகுதிகளில் அரை மணி நேரம் தொடர்ந்து கன மழை பெய்தது. அப்பகுதி விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் விளை நிலங்களில் மலர்த்தூவி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar