பெண்ணாடம் பாலமுத்து மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 04:05
பெண்ணாடம்: சித்திரை திருவிழாவையொட்டி, பெண்ணாடம் அடுத்த சின்ன கொசப்பள்ளம் பாலமுத்து மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று (9ம் தேதி) காலை 10:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், செடல் அணிந்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வழிபட்டனர். இரவு 8:00 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று (10ம் தேதி) காலை 9:00 மணியளவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.