பதிவு செய்த நாள்
11
மே
2019
01:05
அருப்புக்கோட்டை: நமது வாழ்க்கையில் பிரச்னைகளே வாழ்க்கையாக இருப்பவர்கள் மனநிம்மதி பெற, பிரச்சனைகள் தீர கோயில்களை நாடி வருவர்.
இவர்களின் கஷ்டங்களை தீர்த்து மன நிம்மதி தரும் வகையில் சிறப்பு கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி ஸ்ரீபள்ளி கொண்ட பெருமாள் கோயில். மலைப்பட்டியானது கற்கள், பாறைகள் சூழ்ந்த அழகிய கிராமம்.
இங்குள்ள பாறைகள் சிற்பங்கள், சிலைகள் செய்வதற்கு ஏற்றது.
திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோயிலில் மூலவரான பள்ளி கொண்ட பெருமாள் சிலை கூட இங்குள்ள பாறைகளால் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நாளில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் போக இங்கேயே ஒரு கோயில் அமைத்து சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு உள்ளது.
மூலவர் பெருமாள் 15 நீள சிலையாக இருப்பதால், விஸ்வ ரூப பள்ளி கொண்ட பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் மூலவர் உடை வாளுடன் சயனக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இவரை வழிபட்டால் தீராத பிரச்னைகள், கடன் தொல்லைகள், திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தீராத நோய்கள் விலகும்.
ஆண்டு முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகளான வருட பிறப்பு, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத நிகழ்ச்சிகள், கருட பஞ்சமி உட்பட பல விழாக்கள் விமர்சையாக நடைபெறும். கோயிலின் தல விருட்சம் மூலவரின் தலைக்கு அருகில் கருவறையின் பின்புறம் உள்ள ஒதிய மரமாக உள்ளது. திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் இந்த விருட்சத்தை பெண்கள் பக்தியுடன் வணங்குவர். மலைமேல்
அமைதியாய் அமைந்திருக்கும் பள்ளி கொண்ட பெருமாளை இயற்கை காற்றை சுவாசித்தப்படி பக்தியுடன் நாமும் வணங்கலாம்.
தகவலுக்கு 9842307441, 90034 26769ல் தொடர்பு கொள்ளலாம்.