Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணஞ்சேரியில் திருக்கல்யாண ... சேவுகப்பெருமாள் கோவில் திருவிழா துவக்கம் சேவுகப்பெருமாள் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 மே
2019
02:05

 திருவாரூர் : கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி இசை விழா, திருவாரூரில் கோலாகலமாக நடந்தது.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான, முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகிய மூவரும், திருவாரூரில், 17ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள்.  ஆண்டுதோறும், திருவாரூரில், இவர்களது ஜெயந்தி விழா நடந்து வருகிறது.நடப்பு ஆண்டு விழா, 9ம் தேதி, திருவாரூர் தியாக ராஜ சுவாமி கோவில், கமலாம்பாள் சன்னிதி எதிரில் துவங்கியது.காஞ்சி, சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காணொலி காட்சி மூலம், விழாவை  துவக்கி வைத்தார். மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவை ஒட்டி, பல இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த, 9ம் தேதி மாலை, 4:45 முதல், இரவு, 8:15 மணி வரை, நாதஸ்வரம், வயலின், மிருதங்கம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து, 10ம் தேதியும், இசை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 8:30 மணியளவில், சங்கீத வித்வான்கள் பங்கேற்ற  பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், திருவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கவர்னர் பேசுகையில், கர்நாடக இசை, தென் மாநில அளவில் புகழ் பெற்றது. இந்த இசை வளர, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் பங்கு முக்கியமானது.

இதே போல், விழா கொண்டாடுவது, அடுத்த தலைமுறையினருக்கு பயன் அளிக்கும், என்றார்.காலை, 10:00 மணி முதல், கிளாரிநெட், நாதஸ்வரம், சொற்பொழிவு, பல குழுவினரின் பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.ஏற்பாடுகளை, மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாக் குழு  தலைவரும், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியருமான, ஆர். ராமசுப்பு வழிகாட்டுதல்படி, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.திருச்சி மாவட்டம், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar