உடுமலை:உடுமலை அமராவதிஅணையில், அமராவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, வரும் 14ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு சக்தி கும்பம் மற்றும் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 15ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர்.மே 16ம் தேதி மஞ்சள் நீராடுதல், சப்பரம் திருவீதி உலா நடக்கிறது. வரும் 17ம் தேதி மறுபூஜை நடக்கிறது. 14ம் தேதி வரை, நாள்தோறும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.