பதிவு செய்த நாள்
17
மே
2019
02:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடக்கும் அத்தி வரதர் வைபவத்தை காண, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமாக வர உள்ளனர். இதனால், முக்கிய தங்கும் விடுதிகளில் முன்பதிவு முடிந்து விட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், வரதராஜப் பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1 முதல் நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சி
நடைபெறுகிறது.தெப்பக் குளத்தில், தண்ணீரில் மூழ்கியிருக்கும் பெருமாள், வெளியே எடுக்கப்படும் இந்த வைபவத்தையும், அதைத் தொடர்ந்து, 48 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளையும் காண, பல லட்சம் பேர் வருவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக, காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தங்கும் விடுதிகளில், அறைகள் வாடகைக்கான, முன்பதிவு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதில் வழக்கத்தை விட, பல மடங்கு கட்டணம் அதிகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், ஓட்டல் அறைகளில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்
என்ற சூழல் உள்ளது. அத்தகைய நிலையில், விடுதியாளர்கள்கேட்கும் கட்டணத்தை கொடுக்க வேண்டிய நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.