உங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசலை பார்ப்பீர்கள். அதே சாலையின் ஓரம் பூத்துக் குலுங்கும் மலர்களை ரசிக்க மாட்டீர்கள். மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பர் என அனைவரிடமும் உள்ள நல்ல விஷயங்களை ரசியுங்கள்...கொண்டாடுங்கள்! குழந்தைகளிடம் இதை கற்றுக் கொள்ளுங்கள். எதையும் ரசித்து மகிழ்வது அவர்களின் குணம்.