பதிவு செய்த நாள்
30
மே
2019
11:05
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இன்று(30ம் தேதி) தேரோட்டம் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்துள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில், தேர்திருவிழா கடந்த, 13ம் தேதி துவங்கியது.கடந்த, 21ம் தேதி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.
22ம் தேதி யாக பூஜைக்கு பின், கொடியேற்றப்பட்டது. அன்று இரவு, மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.கடந்த, 24 முதல் 28 வரை காலை, இரவு நேரங்களில் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். நேற்று, 29ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், இரவு, 7:00 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
இன்று, (30ம் தேதி) காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் தேருக்கு புறப்படுதல், மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.வரும், 31, ஜூன் முதல் தேதியில், மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.மூன்று நாள் தேரோட்டத்துக்கு பின், ஜூன் 2ம் தேதி மதியம், 12:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேக வழிபாட்டுடன் தேர்திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் சரவணபவன், தக்கார் ஆனந்த் மற்றும் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.