Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாத்தா! கோவிலை அகற்ற ... சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் துவங்கி 3 நாட்கள் நடக்கிறது சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு

பதிவு செய்த நாள்

30 மே
2019
11:05

மதுரை : -திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ராஜகோபுரம் கீழ் உள்ள வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சில ஜோதிடர்களின் சொல்படி கேட்டு, சில அரசியல் வாதிகள் தங்களின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில், 1988 முதல் ராஜகோபுர வாயில் வழியாக பக்தர்கள் செல்வதை தடை செய்தனர். அவ்வாயில் நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனால் ஆகம விதிகள், நடைமுறைகளுக்கு மாறாக பின்னோக்கிய முறையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ராஜகோபுர வாயில் திறக்கப்படும்பட்சத்தில், திருவிழாக் காலங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க அவசியமில்லை.எந்த ஒரு கோயிலிலும் ராஜகோபுர வாயில் வழியாகச் சென்று, மூலவரை தரிசனம் செய்வதுதான் முறை. கம்பீர தோற்றம் கொண்ட பிரதான ராஜகோபுர வாசலை திறக்கக்கோரி அறநிலையத்துறை செயலாளர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நாராயணன் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி அமர்வு அறநிலையத்துறை செயலாளர், கமிஷனர், திருச்செந்தூர் கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar