நரசிம்ம மூர்த்தியின் கடும் சினத்தை அடக்கயருள, வீரபத்திரரே சரபேஸ்வர வடிவம் கொண்டார் என்று சரப புராணம் தெரிவிக்கிறது. எட்டுக் கால்களும், இரண்டு சிறகுகளும், சிங்க முகமும் வளைந்த மூக்கும் கொண்ட சரபப் பட்சியானார் வீரபத்திரர். எனவே சரபரை வழிபட்டாலும் அது வீரபத்திரரை வழிபட்ட பலனைத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.