Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரை வெண்பாவில் பத்து அவதாரங்கள்! குபேர லிங்கம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவல் தரும் ஆனந்த வாழ்க்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
04:06

குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் கிராமத்தில் குசேலர் பிறந்ததால் அக்காலத்தில் அது சுதாமாபுரி எனப்பட்டது. கிருஷ்ணலீலைகளைப் பார்த்து மகிழும் பொருட்டு நாரத முனிவரே, மது காரோசனா தம்பதிக்கு சுதாமா என்ற மகனாக அவதரித்தார் என்று கூறுவர். சுதாமாவுக்கு அவர் பிறந்த கிராமததில் 12, 13-ம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட கோயிலை கிராம மக்கள் திருப்பணி செய்து விரிவுபடுத்தினர். சுதாமாவுக்கு இந்தியாவில் அமைந்துள்ள ஒரே கோயில் எனும் சிறப்பும் இதற்குண்டு. ராஜஸ்தான் மாநில க்ஷத்திரிய வம்சத்தினர் மணமானவுடன் தம்பதியராக இத்தலத்திற்கு வந்து வழிபடும் மரபுள்ளது.

கோயில் நுழைவாயிலில் சுதாமாபுரி யாத்ரா தாம் என்ற பெயரைத் தாங்கிய வரவேற்பு வளைவு உள்ளது. 50 தூண்களைக் கொண்ட விசாலமான மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் சுதாமாவும் அவருக்கு இடப்புறம் அவரது மனைவி சுசீலாவும், வலப்புறம் கிருஷ்ணரும் அமர்ந்த நிலையில் காட்சிதருகின்றனர். கருவறைக்கு மேலே வட இந்திய பாணியில் உயரமான விமானம் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் அழகான நந்தவனமும், கோயில் வளாகத்தில் சுதாமா பயன்படுத்திய கிணறும் உள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தி நடைபெறும். காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு "தாமாஜீ தண்டுதல் (குசேலரின் அவல்) என்ற மகாபிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதை உண்பவர்களுக்கு செல்வளம் பெருகும். ஆனந்த வாழ்வு ஏற்படும் மற்றும் மகப்பேறு வேண்டுவோருக்கு அது கிட்டுமென்பது நம்பிக்கை. இந்தியா முழுவதும் அட்சய திருதியை நாளை குசேலர் தினமாக அனுஷ்டிக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar