Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் ... கும்மிடிப்பூண்டி, ஸ்ரீதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்துக்கு ஏற்பாடு ரூ.12.89 கோடியில் பணிகள் ஜரூர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்துக்காக, 12.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதர் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல், அத்தி வரதர் வைபவம் துவங்க வுள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:

* வரதராஜ பெருமாள் கோவில் உட்புறத்தில், இரு சுத்திகரிப்பு இயந்திரங்கள், வெளிப்புறம், நான்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில், ஆறு புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன

* இது தவிர, 96 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன

* கோவில் அருகே, காவல் கட்டுப்பாட்டு அறையும், நகரை சுற்றி முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படுகின்றன

* காதார துறையின் மூலமாக வாகன மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத் நுழைவு போன்ற தற்காலிக பஸ் நிறுத்தங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்படுகிறது

* அத்தி வரதர் வைபவத்துக்காக, காஞ்சிபுரம் நகராட்சி மூலம், 4.37 கோடி ரூபாய், மின்வாரியம் மூலம், 92.37 லட்சம் ரூபாய், நெடுஞ்சாலைத் துறை மூலம், 4.96 கோடி ரூபாயில் பணி

* ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் மூலம், 2.52 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, 10 லட்சம் ரூபாய் என, 12.89 கோடி ரூபாய் செலவில், பணிகள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.வைபவம் நடக்கும் நாட்கள் ஜூலை 1 - ஆகஸ்ட் 17

* தரிசன நேரம்:

* காலை, 6:00 - மதியம், 2:00
* மதியம், 3:00 - இரவு, 8:00

(ஆனி கருடசேவை, ஆடி கருடசேவையின்போது, மாலை, 6:00 - இரவு, 9:00 மணி பொது தரிசனம் ரத்து) தற்காலிக பஸ் நிலையம் ஓரிக்கை ஒலிமுகமதுபேட்டை  பச்சையப்பன் கல்லூரி வளாகம் (பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு, 10 பஸ்கள், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கம்) தரிசனத்திற்கு வழி

* பொது தரிசனம்: - கிழக்கு ராஜகோபுரம், தேசிகர் சன்னிதி வழி சிறப்பு தரிசனம் - கிழக்கு ராஜகோபுரம், தேசிகர் சன்னிதி, வசந்த மண்டபம் வழி மற்றொரு தரிசனம் -மூலவர் சன்னிதி, தாயார் சன்னிதி, மேற்கு ராஜகோபுரம் வழி கழிப்பறைகள் ஏற்பாடு கோவிலை சுற்றி - ஆண்கள் - 11; பெண்கள் - 11 சின்ன காஞ்சிபுரம் - 36 பெரிய காஞ்சிபுரம் - 92(நகராட்சியில் ஏற்கனவே, 70 கழிப்பறைகள் உள்ளன)

வாகனங்கள் நிறுத்தும் இடம்: பச்சையப்பன் கல்லூரி, நசரத்பேட்டை திருவீதி பள்ளம் பெரிய தோட்டம் ஒலிமுகமது பேட்டை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar