Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் சுற்றுச்சூழல் ... காஞ்சிபுரம் அத்தி வரதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறை திறக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறை திறக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

காஞ்சிபுரம்:ஏகாம்பரர் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டடத்தை, அத்திவரதர் வைபவத்தை காண வரும், வெளியூர் பக்தர்களுக்காக திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்து, ஹெரிடேஜ் எனப்படும், புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 23.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் சாலை வசதி, நடை பாதை, நவீன கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், பக்தர்களின் உடைமைகள், காலணி பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளன.

இருமாதங்களுக்கு முன், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை திறக்கப்பட்டது. ஆனால், ஏகாம்பரநாதர் கோவில் அருகே கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படவில்லை.இந்நிலையில், காஞ்சிபுரம் வரதர் கோவிலில், ஜூலை, 1ல், அத்திவரதர் வைபவம் துவங்க உள்ளது. தொடர்ந்து, 48 நாட்கள் நடைபெறும், இந்த வைபவத்தை காண காஞ்சிபுரம் நகருக்குள் வர ஏழு வழிகள் உள்ளன.

இதில், பெரிய காஞ்சிபுரம் வழியாக வரும், வெளியூர் பக்தர்களுக்காக, உடைமைகள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, காலணி பாதுகாப்பு அறை உள்ளிட்ட கட்டடங்களை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar