Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் ஒத்தை வேஷ்டி சுவாமிகள் ... நல்லம்பள்ளி மஹா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராண்டாவுக்கு மாறிய மாரியம்மன் கோவில் அலுவலகம்: புது அலுவலகத்துக்கு செல்லாதது ஏன்? பக்தர்கள் கேள்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
02:06

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் அலுவலகம், வராண்டாவுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

ஈரோடு, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் அலுவலகம், பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில், பழைய கட்டத்தில் இயங்கி வருகிறது. செயல் அலுவலராக ரமணி காந்தன் உள்ளார். அலுவலக மேற்கூரை சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.

இதற்கு அறிகுறியாக அவ்வப்போது, சிமென்ட் காரை பெயர்ந்து விழ தொடங்கியுள்ளது. இதனால் சவுக்கு மரக்கட்டையால் முட்டு கொடுத்தனர். இந்நிலையில் கட்டத்தை இடித்து விட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த, 2016ல் கோவில் செயல் அலுவலராக ராஜா இருந்தபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைப்பு பணி, காலியாக இருந்த இடத்தில் புது அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை புது அலுவலகத்தை திறக்க வில்லை. அதே சமயத்தில், பழைய கட்டத்தில் தொடர்ந்து செயல்படவும் முடியவில்லை.

இந்நிலையில் பெரிய மாரியம்மன் மூலவர் சன்னதி பின்புற வராண்டாவில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறைக்கு, நேற்று 16ல்., இடமாற்றம் செய்யப்பட்டது. புது அலுவலகம் இருக்கும் போது, வராண்டாவில் தற்காலிக அறை அமைக்க வேண்டியது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், புது அலுவலகத்தை திறந்து வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar