குளித்தலை அருகேயுள்ளது ரத்தினகிரி என்னும் ஐயர் மலை. இதை கிரிவலம் வருகையில் ஓரிடத்தில் நாகப்புற்று உள்ளது. கனக கந்தராங்கிணி என்ற நாக தேவதை அருள்செய்யும் புற்று இது. பஞ்சமி திதியன்று கிரிவலம் வந்து, இப்புற்றுக்கு தாமே கோர்த்த ஐந்து வகையான மலர்களால் மாலையைச் சாத்தி சுமங்கலிகளுக்கு புடவை, ரவிக்கை, வளையல், மெட்டி போன்ற மங்கலப் பொருட்களை தானம் செய்து வந்தால் நாக தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை!