Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 முப்பழ அபிஷேகம் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க தடை நீக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க தடை நீக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவரைத் தரிசிக்க, நேற்று முன்தினம், போலீசார் தடையாக இருந்ததாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மூலவரைத் தரிசிக்க, எளிதான வழிகள் நேற்று ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், அத்தி வரதர் வைபவம், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை வணங்கினர். நேற்று முன்தினம் இரவு, வரிசையில் நின்றிருந்த பல பக்தர்கள், மயங்கி விழுந்துள்ளனர். மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். இதன் காரணமாக, வரிசையில் நிற்கும் பக்தர்கள் அருகிலேயே, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் மூலவரை தரிசிக்கச் சென்ற பக்தர்கள், போலீசாரால் தடுக்கப்பட்டனர்.

இது குறித்து, நேற்றைய, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில், நேற்று, மேற்கு, கிழக்கு கோபுரம் என, இரு வழிகளிலும் மூலவரைத் தரிசிக்க, தனி வழி அமைத்து, கலெக்டர் பொன்னையா ஏற்பாடு செய்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு வரை வசூலிக்கப்பட்டு வந்த, 50 ரூபாய் கட்டணம், ரத்து செய்யப்பட்டதால், பொது வழியிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம், 50 ரூபாய் கட்டண தரிசனத்தில், 18 ஆயிரத்து, 927 பேர் வந்திருப்பதாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. இதன் மூலம், 9 லட்சத்து, 46 ஆயிரத்து, 350 ரூபாய் வசூலாகி உள்ளது. இலங்கை அமைச்சர், செந்தில் தொண்டைமான், இந்து முன்னணி நிறுவனத் தலைவர், ராமகோபாலன் ஆகியோர் நேற்று, அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.கலெக்டர் பொன்னையா, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., நாகராஜன் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கோவிலில் ஆய்வு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar