Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி அத்திவரதர் வைபவம் 3 சிறப்பு ... உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க முடிவு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க முடிவு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2019
01:07

காஞ்சிபுரம்:பயணியர் வருகையை பொறுத்து, காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ரயில் நிலையங் களில், கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ரயில் நிலையங்களில், தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ், நேற்று ஆய்வு செய்தார். ரயில் நிலையங்களில் பராமரிப்பு மற்றும் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், அத்தி வரதர் வைபவத்திற்காக, ஏற்கனவே கூடுதலாக மூன்று மின்சார ரயில்கள் விடப்பட்டன. மேலும், இரு மின்சார ரயில் விடப்படுகிறது என்றார்.

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர், நடைமேடை, கழிப்பறை வசதிகள் என்ன நிலையில் உள்ளது என்பதை பார்வையிட்டார்.புதிய ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி கள் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. டிக்கெட் கவுன்டர் கழிப்பறையில், தண்ணீர் வரவில்லை என்பதை, நேரடியாக பார்த்து, அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

சென்னை மக்கள், அத்தி வரதர் தரிசன வசதிக்காக, அதிகாலை, மின்சார ரயில் சேவை இயக்கப்படுமா என்ற கேள்விக்கு, பரிசீலிக்கப்படும் என்றார்.இது குறித்து, தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ் கூறியதாவது:காஞ்சி அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில்என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வந்தேன்.

பயணியர் வருகையை பொறுத்து, காஞ்சிபுரம் இரு ரயில் நிலையங்கள் மற்றும் நத்தப் பேட்டை ரயில் நிலையத்தில், கூடுதல் டிக்கெட் கவுன்டர் வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் மேம்பட்ட சிறப்பு ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூரில், ஆயிரம் ஆண்டு பழமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar