பணத்தைத் துச்சமாக மதித்த ஞானி ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது பெயர் ஜூனைதுல் பக்தாதி. ஞானிக்கு ஒருமுறை 500 பொற்காசுகளைக் காணிக்கையாக அளிக்க முன்வந்தார் இவரது சீடர் ஒருவர். “சீடரே! இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?” எனக் கேட்டார் ஞானி. “நிறைய இருக்கிறது, ஏன் கேட் கிறீர்கள்?” என கேட்டார் சீடர். உங்களுக்கு ’அந்தப் பணம் போதுமா? இன்னும் தேவையிருக்கிறதா?” என்றார் ஞானி. “ நான் இன்னும் பொருள் சேர்க்கவே ஆசைப் படுகிறேன்,” என்றார் சீடர். “ உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருப்பதால், இந்த 500 பொற் காசுகளையும் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு பணம் தேவையில்லை” என மறுத்தார் ஞானி. இறைத்தொண்டு செய்பவர்களுக்கு தேவை என்பது குறைவாகவே இருக்கும்.