சாப்பிடுவது குறித்து நாயகம் கூறியுள்ள கருத்துக்கள்: *உணவு வைக்கப்பட்டால் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும். *இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனெனில் ஷைத்தான் இடது கையாலேயே உண்ணுகிறான். *எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆகாது. *எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். அதில் தான் சொர்க்கம் இருக்கிறது.