இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள மருதங்கநல்லுாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
மருதங்கநல்லுாரில் அமைந்துள்ள திருவேட்டை அய்யனார் கோயிலுக்கு, மழை வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் கிராம மக்கள் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இவ்விழா 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஜூலை., 11ல்) நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) பக்தர்கள் திருவேட்டை அய்யனாருக்கு 200க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று (ஜூலை., 11ல்) காலை,மருதங்கநல்லுார் கிராமத்தில் இருந்து பக்தர்கள் புரவிகளுக்கும்,பிள்ளை உருவ பொம்மைகளுக்கும் பூஜை நடத்தி மேள தாளங் களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.