பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
புதுச்சேரி:கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலி சார்பில், நாளை 14ம் தேதி நான்கு இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரத்தில், ஜீவ சமாதி அடைந்துள்ள, காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாக விளங்கிய பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 327 வது ஆராதனை மகோற்சவம் வரும் 13.09.2019 முதல் 29.09.2019 வரை கோவிந்தபுரம் மடத்தில் நடக்கிறது.
இந்த உற்சவத்தையொட்டி, கோவிந்தபுரம் மடத்து பாகவதர்களால் நகர மற்றும் கிராமங்க ளில் பல்வேறு இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. புதுச்சேரியில், கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில் நாளை 14ம் தேதி, நான்கு இடங்களில் உஞ்சவர் த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
ரெயின்போ நகர், சுமுக விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 மணி வரையிலும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 மணி முதல் 9:00 மணி வரையிலும் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
தொடர்ந்து, காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலிலும், காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை எல்லப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலிலும் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.