பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை, மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 2003ல் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மீண்டும், 2017, ஜூலையில் நடந்தது. மறுமுறை நடந்து, இரு ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை., 13ல்), சிறப்பு உற்சவம் நடந்தது.இதை முன்னிட்டு, காலை, 8:30 மணிக்கு, சிறப்பு யாகம் நடத்தி, சுவாமி, அம்பா ளுக்கு, அபிஷேகம் செய்து, வழிபாடு நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, சுவாமி, அம்பாளுடன், நந்தி வாகனத்தில், கைலாச வாத்திய முழக்கத்துடன், வீதியுலா சென்றார்.