பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதூர் கிழக்கு காலனி, காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்தனர். மருதூர் மாரியம்மன்கோவில், செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, அம்மனை வழிபட்டனர். பின் காளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதன்பின், இரவு கல்லுப்பாலத்தில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் இன்று (ஜூலை., 15ல்) நடக்கிறது. நாளை (ஜூலை., 16ல்)மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.