விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று முதல் வெள்ளியையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், கரகம் வீதியுலா, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு அம்மன் வீதியுலா நடந்தது.இன்று 20ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு எஸ்.ஏ.டி., குமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 21ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு எக்சலண்ட் நடனப் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும், தொடர்ந்து கும்ப படையலும் நடக்கிறது.