பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
திருப்பூர்:ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜூலை., 19ல்), திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில், அன்ன தானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம் மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட, அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜூலை., 19ல்), அனைத்து அம்மன் கோவில்களும், வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டி ருந்தன.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள, முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் அபிஷேக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங் காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 10 :00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லடம், ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், பனப்பாளையம் மாரியம்மன், கடைவீதி மாகாளி யம்மன், வடுகபாளையம் மாகாளியம்மன் மாரியம்மன், கொசவம்பாளையம் மாகாளியம் மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும், வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்தது.
அவிநாசி அங்காளபரமேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பண்ணாரி மாரிய ம்மன் கோவில், முனியப்பன் கோவில் வீதி ஆதிபராசக்தி கோவில், கருவலுார் மாரியம்மன் கோவில் உட்பட வட்டாரத்திலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.