திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள பெரிய முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, கூழ்வார்த்தல் நடந்தது.திண்டிவனத்திலுள்ள எம்.ஆர்.எஸ்., ரயில்வே கேட் பகுதியில் உள்ள பெரிய முத்துமாரியம்மன் கோவிலில், முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கூழ்வார்த்தல் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.