பதிவு செய்த நாள்
21
ஜூலை
2019
12:07
ஈரோடு: ஈரோடு, கோட்டை, சின்னபாவடி முத்துக்குமாரசாமி கோவில், பூந்தேர் திருவிழா, வரும், 25ல் நடக்கிறது. இன்றிரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. முன்னதாக மஹா கணபதி ?ஹாமம் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 23ல் இரவு, 8:00 மணிக்கு படைக்கலம், 24ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வைபவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான, பூந்தேர் ஊர்வலம், 25ல் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. 26ல் காலை, 11:00 மணிக்கு, மறு அபிஷேகம், பூஜையுடன் விழா நிறைவடைகிறது.