சிறுபாக்கம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 03:08
சிறுபாக்கம் : மங்களூர் முத்து மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு விழாவில் சிறப்பு அலங் காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.இதையொட்டி, நேற்று (ஜூலை., 31ல்)அதிகாலை 5:00 மணியளில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் அலங்கரிக்கப் பட்ட அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணியளவில் மேள தாளங்களுடன் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.