திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளூர் என்ற கிராமம். இங்குள்ளது திருகாமேஸ்வரர் கோயில். இறைவி சிவகாம சுந்தரி. இத்தலத்தில் மகாலட்சுமி வில்வமரமாக மாறி நின்று சிவபூஜை செய்தாள். சிவபெருமான் மகாலட்சுமிக்கு ஐஸ்வரிய மகுடத்தை அளித்து, சகல ஐஸ்வரியத்திற்கும் அதிபதியாக ஆக்கினார் என்கிறது தலபுராணம். எனவே இங்கு மகாலட்சுமி ஐஸ்வரிய மகாலட்சுமி என்ற திருப்பெயராலேயே அழைக்கப்படுகிறாள்.