பதிவு செய்த நாள்
11
ஆக
2019
04:08
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூரம் விழாவிற்கு வந்த பக்தர்கள், உண்டியலில், 58 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 3ம் தேதி, ஆடிப்பூரம் விழா நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தி, உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது.இதில், 58 லட்சத்து, 6 ஆயிரத்து, 135 ரூபாய் ரொக்கம், 377 கிராம் தங்கம், 4,860 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.