Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார் ... ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடையில் எருதுகட்டு விழா ஆர்.எஸ்.மங்கலம் அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் வசதிகள் பொதுத்துறை நிறுவனம் முடிவு
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் வசதிகள் பொதுத்துறை நிறுவனம் முடிவு

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
02:08

மாமல்லபுரம்:தேசிய முன்மாதிரி பாரம்பரிய நினைவுச்சின்னமாக, ஆதர்ஷ் சிறப்பு பெற்ற, மாமல்லபுரம் கடற்கரை கற்கோவில் வளாகத்தில் வசதிகளை மேம்படுத்த, பொதுத்துறை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கி.பி., 7ம் நுாற்றாண்டு, பல்லவர் கால, பாறை சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வ தேச பாரம்பரிய நினைவுச்சின்ன சுற்றுலா இடமாக விளங்குகிறது.கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இங்கு இருப்பதால், உள் மற்றும் வெளிநாட்டுப் பயணியர், இவற்றை காண குவிகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபை, கலாசாரக் குழு, இவற்றை, சர்வதேச நினைவுச்சின்னங்களாக, அங்கீகரித்துள்ளது.

இச்சூழலில், நாட்டின், 25 பாரம்பரிய சின்னங்களை, தேசிய முன்மாதிரி நினைவு, ஆதர்ஷ் சின்னங்களாக, மத்திய அரசு, மூன்றாண்டுகளுக்கு முன் அறிவித்தது.தமிழகத்தில், கடற்கரை கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், ஆதர்ஷ் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. ஆதர்ஷ் சின்ன பகுதியில், சுற்றுலாவிற்கு ஏற்ற சூழல், கலைச்சின்னங்கள் குறித்த கருத்தியல், காட்சியியல் கூடம், பிரகாச விளக்குகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ’பேட்டரி’ வாகனம், ’வை - பை’ எனும் கம்பியில்லா இணையம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பொதுத் துறை நிறுவன, சமூக பொறுப்பு திட்டத்தில், இவ்வசதிகள் மேற் கொள்ள முடிவெடுத்து, ’இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நிறுவன நிர்வாகத்துடன், மத்திய கலாசாரத் துறை, தற்போது பரிசீலிக்கிறது.இந்நிலையில், அந்நிறுவன பிரதிநிதிகள், அண்மையில், கடற்கரை கோவிலை பார்வையிட்டனர்.

இது குறித்து, தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:இக்கோவில் பகுதியில், பயணியர் தேவைக்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம், பல வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக, எங்கள் துறை, அந்நிறுவனத்துடன் பரிசீலிக்கிறது. கோவில் பார்வை நேரத்தை, இரவு, 9:00 மணி வரை நீட்டிப்பது குறித்தும், துறை தலைமையகம் அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar