சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவகங்கை தேவஸ்தானம், சமஸ்தானத்திற்கு உட்பட்ட, சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் ரவி குருக்களால் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.