குச்சனுார் சுரபி நதியில் முகம் சுழிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2019 12:08
சின்னமனுார் : குச்சனுார் சுரபி நதியில் பக்தர்கள் அவிழ்த்து விடும் ஆடைகளால் மாசுபடுகிறது. குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் எதிரே சுரபி நதி ஓடுகிறது. ஆண்டு முழுவதும் நீர் வரத்திருந்த நிலை மாறி, ராஜவாய்காலில் நீர் திறக்கும் போது மட்டும் தண்ணீர் வரத்துள்ளது. பரிகார தலமான இங்கு வரும் பக்தர்கள் நதியில் நீராடி, கொடிமரத்தில் எள் விளக்கேற்றி, சுயம்பு மூலவரை தரிசித்து செல்கின்றனர். நீராடும் பக்தர்கள் ஆடைகளை அப்படியே வாய்க்காலுக்குள் வீட்டு செல்வதால், கோயில் அருகேயுள்ள சுரபி நதி முழுவதும் கழிவு துணிகளால் நிரம்பி விடுகிறது. இதனால் புண்ணிய நதி மாசுபடுகிறது.அறநிலையத்துறையினர் கூறுகையில், வாரத்தின் சனிக்கிழமை தோறும் சுரபி நதியில் உள்ள துணிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இவற்றை சேகரிப்பதற்கான ஏலம் விடுவதற்கு, உயரதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம், என்றனர்.