பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
உடுமலை:உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ விழா நேற்று துவங்கியது.நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர்.
ஜெயந்தி உற்சவம் நேற்று துவங்கி, செப்., 2 தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு மாலை, 4:00 மணிக்கு கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது. பெருமாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, மயிலிறகு சூடி, மலர் அலங்காரத்துடன் கோபால கிருஷ்ணராக சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி மற்றும் சென்னியோங்கு பாசுரங்கள் சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, நாராயண நாமம், கூறி வழிபட்டனர். விழாவில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெண்ெணய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.