Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் ... கம்பத்தில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி கம்பத்தில் வழுக்கு மரம் ஏறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் அறியப்படாத ஆன்மிக தலம்
எழுத்தின் அளவு:
மதுரையில் அறியப்படாத ஆன்மிக தலம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
01:08

மதுரை : மதுரையில் பாரம்பரிய பெருமை பேசும் அறியப்படாத ஆன்மிக சுற்றுலா தலங் களில் யானைமலை ஒத்தக்கடையில் உள்ள பிள்ளை லோகாச்சார்யா கோயிலும் ஒன்று.

நம் நாட்டு வளங்களை 1323ல் கொள்ளையடிக்க அந்நியர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை நோக்கி படையெடுத்தனர். கோயிலை காக்க பிள்ளை லோகாச்சார்யா, வேதாந்த தேசிகர் ஆகியோர் மூலவர்கள் ரங்கநாதன், தாயார் சிலைக்கு கல் திரையிட்டனர். உற்ஸவர்கள் அழகிய மண வாளன், தாயாரை மூடு பல்லக்கில் வைத்து தெற்கு நோக்கி புறப்பட்டனர்.

மதுரை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் வந்த போது அதற்கு மேல் செல்ல முடியாமல் மலை குகைக்குள் உற்ஸவர்களை வைத்தனர். தினமும் திருவண்டிக்காப்பு பூஜை செய்யும் முன் மலையில் ஏறி அந்நியர்கள் வருகிறார்களா என்று பார்ப்பர்.

அந்நியர்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து ’ஆஹோ... ஓஹோ’... என, குரல் எழுப்பிய பின் பூஜைகள் நடக்கும். இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த பூஜைக்கு முன் இப்படி குரல் எழுப்புகிறார்கள்.

மதுரை எழுத்தாளர் நிரஞ்சனா கூறியதாவது: லோகாச்சார்யா 120ம் வயதில் முக்தி அடைந்தார். பின் குகைக்குள் இருந்த பெருமாளை அழகர்கோவில், கோழிக்கோடு, திருக்கண்ணாம்பி, திருப்பதி, செஞ்சி கோட்டை பகுதிகளில் எடுத்துச்சென்று பாதுகாத்தனர். 48 ஆண்டுகளுக்கு பின் 1371ல் மீண்டும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சேர்த்தனர். அப்போது உண்மையான சிலைதானா என்ற சந்தேகம் வந்தது. பெருமாளின் ஆடைகளை துவைக்கும் பார்வையற்ற முதியவர் ஒருவர், சிலையின் அபிஷேக நீரை சுவைத்து பார்த்து ’இது நம் பெருமாளே’ என்றார். அன்று முதல் ரங்கநாத சுவாமி ’நம் பெருமாள்’ என பெயர் பெற்றார்.

குகையில் இருந்த பிள்ளை லோகாச்சார்யா திருவடிகளுக்கு திருமோகூர் பட்டர்கள் பூஜை செய்து வந்தனர். 2007ல் ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் முயற்சியில் அங்கு லோகாச்சார்யா சிலையுடன் கோயில் புனரமைக்கப்பட்டது. இதுபோன்று மதுரையில் உள்ள பழங்கால கோயில்களை கண்டறிந்து ஆன்மிக சுற்றுலா தலமாக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar