மானாமதுரை : திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் உள்ள ராமலிங்க விலாசத்தில் கட்டிக் குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப்பெருமாள் கோயில் 100ம் ஆண்டு ஆடி பிரம்மோற்ஸவ விழாவைமுன்னிட்டு மலையில் இருந்து மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப் படிகளில் எழுந்தருளிய பின்னர் நேற்று முன்தினம் (ஆக., 25ல்) இரவு மானாமதுரை வேளார்தெரு முருகன் கோயிலுக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ங்களும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து வீதிவுலா நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.