Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி மாரியம்மன் கோவிலுக்கு ... கெங்கவல்லி கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2019
03:09

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு  இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட, 800க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், காவிரி  ஆற்றில் கரைக்கப் பட்டன.

நாடு முழுவதும், கடந்த, 2ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து,  நகரம், கிராமப்புறம், சாலையோரம் என, பல்வேறு இடங்களில், சுவாமி சிலைகள்  வைத்து, பூஜிக்கப் பட்டன. நாமக்கல் மாவட்டம் முழுவதும், 655 சிலைகள் வைக்க  போலீசார் அனுமதி அளித் திருந்தனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு  சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அவற்றை, சரக்கு ஆட்டோ,  லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக எடுத் துச் சென்று, நீர் நிலைகளில்  கரைக்கப்பட்டு வருகின்றன. மோகனூர், ப.வேலூர், பள்ளி பாளையம் காவிரி  ஆற்றில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் ஆற்றிலும் கரைப்பதற் காக  எடுத்துவரப்பட்ட சுவாமி சிலைகள், கரையில் வைத்து சிறப்பு பூஜை  செய்யப்பட்டன. தொடர்ந்து, தோளில் தூக்கிக் கொண்டு, ஆற்றுக்குள் சென்று  கரைக்கப்பட்டன. ஒரு அடி முதல், 15 அடி உயரம் வரை, மயில், சிங்கம், புலி,  பசுமாடு, ஐந்து தலைநாகம் போன்ற பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில்  உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தன.

மோகனூர் காவிரி ஆற்றில், மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி,  நாமகிரி ப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி போன்ற பல்வேறு  பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட, 800க்கும் மேற்பட்ட சிலைகள்  கரைக்கப்பட்டன. அசம்பாவிதம் ஏற்படு வதை தவிர்க்க, மோகனூர் இன்ஸ்பெக்டர்  சுகுமார் தலைமையில், ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர்  பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எஸ்.பி., அருளரசு, டி.எஸ்.பி.,க்கள் காந்தி,  பழனிசாமி ஆகியோர், பாதுகாப்பு பணிகள் குறித்தும், விநாயகர் சிலைகள்  கரைப்பது பற்றியும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தனர். ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar