Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவம் மடப்புரம் உண்டியலில் ரூ.33 லட்சம் காணிக்கை மடப்புரம் உண்டியலில் ரூ.33 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்
எழுத்தின் அளவு:
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்

பதிவு செய்த நாள்

10 செப்
2019
12:09

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நல சங்கம் சார்பில், 7ம் ஆண்டாக, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானார் பற்றிய சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானார்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, வேள்வி பூஜை, அபிேஷக மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சிவனடியார் ஒருவர் சிவபெருமான் வேடமணிந்து, கோவிலின் பின்புறம் சென்று, அணையில் கரையை அடைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தது. மதுரை, வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை அடைப்பதற்கு, அரிமர்த்தன பாண்டிய மன்னன், வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டார். வயதான வந்தியம்மையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதற்காக கூலி ஆள் ஒருவரை நியமனம் செய்ய வேண்டியிருந்தது.அப்போது, அவ்வழியாக கூலிக்கு ஆள் வேண்டுமா என கேட்டுக் கொண்டு சிவபெருமான் கூலியாளாக வந்துள்ளார்.வேலைக்கு சென்றால், உதிர்ந்த பிட்டு தருவதாக மூதாட்டி தெரிவித்தார். சிவபெருமானும், பிட்டு சாப்பிட்டு, வேலைக்கு செல்லாமல் படுத்து உறங்கினார்.

மூதாட்டியின் வேலை மட்டும் நிலுவையில் உள்ளதை அறிந்த, மன்னன் கூலியாளாக வந்த சிவபெருமானை அழைத்து கோலால் அடித்தபோது, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடி விழுந்தது.பின், சிவபெருமான் ஒரு சட்டி மண்ணை எடுத்து அணையில் கொட்டினார். அணையின் உடைப்பு முழுவதும் அடைப்பட்டது. மூதாட்டிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்துள்ளார் என, தெரிவிக்கப்பட்டது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதாம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சங்கத் தலைவர் துரைசாமி, செயலாளர் வெள்ளிங்கிரி, பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar