Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை ... கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோட்டை வாசல் விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களிலும் ஒருங்கிணைந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா?
எழுத்தின் அளவு:
கோவில்களிலும் ஒருங்கிணைந்த விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா?

பதிவு செய்த நாள்

13 செப்
2019
12:09

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைந்த வழிபாட்டு விழா, வெகு விமரிசையாக நடந்தது. விழாவை ஒட்டி, 250 விநாயகர் சிலைகள், ஒன்றாக கரைக்கப்பட்டன. தமிழகத்திற்கு முன்னுதாரணமாக நடந்த இவ்விழாவை, மற்ற கோவில்களிலும், இனி வரும் ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் முதன் முறையாக, விநாயகர் சதுர்த்தி விழாவை, ஒருங்கிணைந்து நடத்த, வடபழனி ஆண்டவர் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ஆண்டு, அப்பணி துவக்கப்பட்டது.  கோவிலை சுற்றி வசிப்போருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று, களிமண்ணில் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகள், இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம், 250 சிலைகள் வழங்கப்பட்டன. சிலையுடன், விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் நேரம், ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் அடங்கிய கையேடு மற்றும் பூஜைப் பொருட்களும் வழங்கப்பட்டன.  ஒன்பதாம் நாளான, நேற்று முன்தினம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட, 250 விநாயகர் சிலைகளை ஒருங்கிணைத்து, கரைக்கும் நிகழ்ச்சி, வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்தது.

இதற்கு, பக்தர்களிடம், பெரும் வரவேற்பு எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி அன்று, 1,000 முதல், 5,000 விநாயகர் சிலைகள், பக்தர்களுக்கு வழங்கி, கொண்டாட முடிவு செய்திருப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, பக்தர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை, தமிழகத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரும், தனிப்பட்ட விழாவாக, கொண்டாடி வருகின்றனர்.  வடபழனி ஆண்டவர் கோவில் நிர்வாகம் சார்பில், முதன் முறையாக, ஒருங்கிணைந்த விழாவாக நடத்தி, பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். விழாவை ஒருங்கிணைத்து நடத்துவதால், பக்தி தழைத்தோங்கும்; சமூக நல்லுணர்வு வளரும்; ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும். இவ்விழாவை, அனைத்து கோவில்களிலும் நடத்த வேண்டும். இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். அடுத்த ஆண்டு, அனைத்து கோவில்கள் சார்பில், 50 லட்சம் விநாயகர் சிலைகளை, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar