Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாத சுவாமி கோயில் ... வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தியானமண்டபம் திறப்பு
எழுத்தின் அளவு:
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தியானமண்டபம் திறப்பு

பதிவு செய்த நாள்

13 செப்
2019
12:09

 மேல்மருவத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று திறந்தார். பின், அடிகளாரின் ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி, அவர் பேசினார்.

மகிழ்ச்சி: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின், தியான மண்டப திறப்பு மற்றும் பங்காரு அடிகளாரின், 80வது பிறந்த நாள் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், நேற்று, நடைபெற்றது.இதில் பங்கேற்க, சித்தர் பீடம் வந்த, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை, ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர்.பின், தியான மண்டபத்தை திறந்து வைத்து, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:தாமரை பீடத்தில் அமர்ந்து, அருளாசி வழங்கும், ஆதிபராசக்தி அம்மனை வணங்கியது மகிழ்ச்சிக்குரியது.ஆன்மிகத்தில், ஜாதி, மத பேதமின்றி, பெண்கள் அனைவரும், ஆதிபராசக்தி அம்மன் கருவறைக்கு சென்று, அவர்களே வழிபடுவது போற்றுதலுக்குரியது. பங்காரு அடிகளாரின், 50 ஆண்டு ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி, அவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது சிறப்புக்குரியது. அடிகளாருக்கு, அடுத்ததாக, பத்மபூஷண் விருது கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க்கை வரலாறு தியான மண்டம், மிக சிறப்பாக அமைந்துள்ளது. கல்வி, மருத்துவ சேவையில், சித்தர் பீடம், சீரிய முறையில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். தியான மண்டபத்தில், பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar