Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் ... ராமேஸ்வரத்தில் இருந்து ஐயப்பன் ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து ஐயப்பன் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு

பதிவு செய்த நாள்

13 செப்
2019
02:09

காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரத்தில், கொலு பொம்மை தயாரிக் கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நவராத்திரி விழா, வரும், 29ல் துவங்குகிறது. விழாவையொட்டி கோவில்களிலும், வீடுகளி லும், கொலு வைக்கப்படும்.இதற்காக, சின்ன காஞ்சி புரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல தலைமுறைகளாக, கொலு பொம்மை தயாரி க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, சின்னகாஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த, சி.கோபிநாத் கூறியதாவது:அத்தி வரதர் வைபவம் நடந்தபோது, இப்பகுதியில், வாகனங்களை, போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், பொம்மை தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்கள் எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், அடையாள அட்டை இல்லாததால், பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களையும், தெருவில் அனுமதிக்கவில்லை.இதனால், இந்தாண்டு, 60 சதவீத பொம்மை மட்டுமே தயாரித் துள்ளோம். இருப்பினும், அத்தி வரதர் வைபவம் நடந்த நாட்களில், அத்தி வரதர் சயன கோலம் மற்றும் நின்ற கோலம் பொம்மை விற்பனை திருப்திகரமாக இருந்தது.ஆண்டுதோறும், புது விதமான பொம்மை அறிமுகம் செய்து வருகிறோம். இந்தாண்டு, 108 திவ்யதேசங்களில், விண்ணுலகத்தில் உள்ள, 108வது திவ்யதேசமான, பரமபதநாதர், புற்றுமாரியம்மன், காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் பொம்மையை அறிமுகம் செய்துள்ளோம்.

கொலு பொம்மை வாங்க வருவோர் அனைவருமே, அத்திவரதர் பொம்மையை வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar