Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ... மடத்துக்குளம் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’பக்தி வழி நடந்தால் தவறே நடக்காது’
எழுத்தின் அளவு:
’பக்தி வழி நடந்தால் தவறே நடக்காது’

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:09

அவிநாசி:”பக்தி மார்க்கம் வழி நடந்தால், உலகில், தவறே நடக்காது” என,  ராஜகோபாலன் சுவாமி கூறினார்.திருப்பூர், முக்தி மார்க்கம் டிரஸ்ட்டின், 5வது  ஆண்டு விழா, அவிநாசி பழனி யப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி  அரங்கில் நேற்று நடந்தது. மஹாளய அமா வாசை மற்றும் முன்னோர் வழிபாடு  குறித்த, சொற்பொழிவு நடந்தது.

டிரஸ்ட் நிறுவனர் குமரன், தலைமை வகித்து பேசுகையில், ’அறக்கட்டளை  சார்பில், இது வரை, 310 அனாதை பிணங்களை, நல்லடக்கம் செய்துள்ளோம்.  ஆண்டுதோறும் பிண்டம் வைத்து, தர்ப்பணம் கொடுத்து வருகிறோம்,”  என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஸ்ரீமத் அஹோபில மடத்தின்  ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன் சுவாமி பேசியதா வது: வாழ்க்கையில் தர்மம்,  என்பது ஆல விருட்சம் போன்றது; அதுதான், புண்ணியம் தேடி தரும். ஒருவர்  தேடும் புண்ணியம் தான், அவருக்கான நல்ல கல்வி, வேலை, மனைவி,  பிள்ளைகள், சொத்து போன்றவை கிடைக்க காரணமாக உள்ளது.

தற்போதைய நிலையில், பல புதிய, கொடிய நோய்கள் வருகின்றன. ஆனால்,  முன்னோர் காலத்தில் இத்தகைய நோய்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  அதற்கு காரணம், அவர் கள் செய்த தர்ம, புண்ணிய காரியங்களும் தான்.இந்து  தர்மமே, மிகச்சிறந்தது; முக்தி மார்க் கம் தான், பக்தி மார்க்கத்துக்கான வழி. பக்தி  வந்துவிட்டால், உலகில், தவறே நடக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.பின்,  பங்கேற்றவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, கிருஷ்ண கனபாடி,  விளக்கமளித்தார். நிகழ்ச்சியில், சிறுமுகை தண்டபாணியின், ராம நாம கனா சபா  குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar