Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 29ல் நவராத்திரி துவக்கம்: கொலு பொம்மை ... அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை பவனி தொடக்கம்
எழுத்தின் அளவு:
சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை பவனி தொடக்கம்

பதிவு செய்த நாள்

26 செப்
2019
03:09

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து இன்று காலை புறப்படும் நவராத்திரி பவனிக்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை நேற்று காலை பல்லக்கில் புறப்பட்டார்.

இருமாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தி வழியனுப்பினர்.திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மனாபபுரம் அந்த அரசின் தலைநகராக இருந்தது. நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், இங்கு நடந்து வந்த நவராத்திரி விழா தடைபடாமல் இருக்கும் வகையில் பத்மனாபபுரம் சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டன.மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும் மரபு மாறாமல் இருமாநில உறவை வலுப்படுத்தும் நிகழ்ச்சியாக தொடர்கிறது.செப்., 29ல் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து பவனி புறப்படுகிறது.

இதற்காக நேற்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை பல்லக்கில் பவனியாக புறப்பட்டார். பக்தர்கள் பூக்களை துாவ, முத்துக்குடை ஏந்திய பெண்கள் அணிவகுக்க, தமிழகம் மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்த பவனி புறப்பட்டது. நேற்று இரவு இந்த பவனி பத்மனாபபுரம் வந்தது. இன்று காலை வேளிமலை முருகன் பல்லக்கில் பத்மனாபபுரம் வந்ததும், சரஸ்வதி சிலையை யானை மீது ஏற்றி பவனி புறப்படும்.இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மற்றும் இருமாநில உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar