Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் ... காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனி எல்லாம் சுகமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
04:10

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகரான பாலக்காடு கே.வி. நாராயண சுவாமியின் வாழ்வில் காஞ்சி மகாசுவாமிகளின் அருள் தொடர்பான ஒரு முக்கிய சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை  நாராயணசுவாமி கச்சேரி நிகழ்த்த அமெரிக்கா சென்றார். அவரது மனைவி, தன் கணவர் கச்சேரி முடித்து நல்லபடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மகாசுவாமிகளை தரிசிக்கப் புறப்பட்டார்.  “நீ மட்டும் வந்திருக்கியே? எங்கே அவர் வரலையா? சீமைக்குப் போயிருக்காரா?’ என விசாரித்தார் சுவாமிகள். தன் கணவர் கச்சேரி நிகழ்த்த அமெரிக்கா சென்றிருப்பதைத் தெரிவித்தார் திருமதி நாராயணசுவாமி. ’அப்படியா...நல்லது. பிரசாதம் வாங்கிக்கோ!’ என கைநிறைய குங்குமம் கொடுத்தார். எல்லோருக்கும் கொஞ்சம் தானே கொடுத்தார், அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் குங்குமத்தை அள்ளிக் கொடுத்தார் என அவரது மனைவி யோசித்தார்.

அருள் பொங்கப் பார்த்த சுவாமிகள்,“ சமுத்திரம் தாண்டிப் போயிருக்கும் உன் கணவர் நல்லபடியா இந்தியா திரும்பி வரணும்னு அம்பாளைப் பிரார்த்தனை பண்ணிக்கோ!” என ஆசியளித்து அனுப்பினார்.  வீட்டிற்கு வந்த நாராயணசுவாமியின் மனைவிக்கு ஓரிரு நாட்களுக்கு பின்  தகவல் ஒன்று வந்தது. அமெரிக்கா சென்ற கணவர்  விஷக் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காஞ்சி மகாசுவாமிகளை மனதார வேண்டினார் திருமதி நாராயணசுவாமி.  அவரது கருணையால் கணவரின் உடல்நலம் மெல்ல தேறியது. ஒப்புக் கொண்ட கச்சேரிகளை நல்லவிதமாக முடித்துக் கொண்ட அவர் விரைவில் இந்தியா திரும்பினார்.  பிறகு தம்பதியாக மகாசுவாமிகளை தரிசிக்க வந்தனர்.  “ அமெரிக்க பிரயாணம் நல்லபடியா அமைஞ்சுதா? இப்போ உடம்பு பூரணமா குணமாயிடுத்து இல்லியா? இனி வாழ்வில் எல்லாம் சுகமாக அமையும்’ என சுவாமிகள் வாழ்த்திய போது இருவரின் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.  திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar