திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் பெருமாள் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2019 01:10
திருப்பதி: திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம், விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின், நான்காம் ஐந்தாம் நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அணிந்து, தோளில் கிளி சுமந்து மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பஸ் நிலையத்திலிருந்து துவங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.