Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயுதபூஜையையொட்டி மருதமலையில் ’ஜே ... உடுமலை அருகேயுள்ள கோபுரமில்லாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் சரஸ்வதி  பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள  கோவில்களில், நவராத்திரியை யொட்டி, கடந்த ஒன்பது நாட்களாக மாலை  நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நேற்று  (அக்., 7ல்), கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், நவராத் திரி கொலுவையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 6ல்) அம்மன், மகிஷாசூரமர்த்தினி அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று (அக்., 7ல்) சரஸ்வதி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி  அம்மன், நாகதேவி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று (அக்., 7ல்) நடந்தது.

பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில்களில் மட்டும் இன்றி, வீடுகளிலும் பொதுமக்கள் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பள்ளி குழந்தைகளின் புத்தகம் மற்றும் வாகனங்கள், தொழில் உபகரணங்களுக்கு  பூஜை செய்து வழிபட்டனர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப் பட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.நேற்று முன் தினம் (அக்., 6ல்) மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar