நரகாசுரன் இறந்த நாளான தீபாவளிஅன்று மக்கள் புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர். திருச்செந்துார் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படும். அன்று அதிகாலையில் இக்கோயிலிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்ட பின்னர் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்து சாத்துவர். முருகப்பெருமான் தெய்வானையின் கரம் பிடிக்க காரணமாக இருந்த தலம் திருச்செந்துார் என்பதால், மாமனாரான இந்திரன் தனது மருமகன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கின்றனர்.