கராமடை: தீபாவளியை ஒட்டி காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோ பூஜை, கோ தரிசனம் நடந்தது மூலவர் ரங்கநாதருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் கால சந்தி பூஜை செய்யப்பட்டது. சாற்று மறை சேவித்து, தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது. மாலை நான்கு ரத வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது. தீபாவளி சிறப்பு வழிபாட்டையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.