Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கராமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு ... தீபாவளி கொண்டாட்டம்: பொள்ளாச்சி கோவில்களில் கோலாகலம் தீபாவளி கொண்டாட்டம்: பொள்ளாச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித தீர்த்தம் எடுக்க உத்தரகாண்ட் பயணம்
எழுத்தின் அளவு:
புனித தீர்த்தம் எடுக்க உத்தரகாண்ட் பயணம்

பதிவு செய்த நாள்

28 அக்
2019
12:10

அன்னுார்:அன்னுாரை சேர்ந்த இரு இளைஞர்கள், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள புனித தலங்களில் தீர்த்தம் எடுத்து வர, 7,200 கி.மீ., துாரம், 19 நாட்களில் பைக்குகளில் சென்று திரும்பியுள்ளனர்.அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் யுவராஜ், 29. குப்பேபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 24. தனியார் நிறுவன ஊழியர்கள். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சோமையம்பாளையம், அய்யாகோவிலில், திருப்பணி நடக்கிறது.

இதற்காக இமயமலை அடிவாரத்தில் உள்ள, புனிததலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் விரும்பினர்.இதையடுத்து இவ்விரு இளைஞர்களும், தலா ஒரு பைக்கில், கடந்த 5ம் தேதி அன்னுாரிலிருந்து புறப்பட்டனர். ஐதராபாத், நாக்பூர், ஜான்சி, டில்லி வழியாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள யமுனேத்ரி கோவிலுக்கு ஐந்து நாட்களில் சென்றடைந்தனர். மலை மீது, 4.5 கி.மீ., நடந்து சென்று, அங்கு யமுனை நதியில் தீர்த்தம் எடுத்தனர்.பின்னர், கங்கோத்ரி சென்று, அங்கு கங்கை நதியின் தீர்த்தமும், கேதார்நாத்தில், மந்தாகினி நதி தீர்த்தமும் எடுத்தனர். பத்ரிநாத்தில், சரஸ்வதி நதிதீர்த்தம் எடுத்தனர். அதன்பின் எல்லைப்புற கிராமமான மணாவில் ஒரு நாள் தங்கினர். பைக்குகளில், தேசிய கொடி ஏற்றியபடி, கோவை டூ உத்தரகாண்ட் என்னும் ஆங்கில வாசகத்துடன் பைக்கில் சென்றதால், மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அன்னுாரிலிருந்து, 19 நாட்களில், 7,200 கி.மீ., துாரம் பைக்கில் பயணம் செய்து, புனித தலங்களின் தீர்த்தம் எடுத்து வந்ததற்கு, ராணுவம், போலீஸ் அதிகாரிகள் பக்தர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்னுார் திரும்பிய இருவருக்கும், கஞ்சப்பள்ளி மற்றும் குப்பேபாளையம் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar