பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
கோவில்பாளையம்:கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி, லட்சார் ச்சனை விழா நாளை நடக்கிறது.கோவில்பாளையத்தில், பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற தலமாகும். குருபகவான், நாளை (29ம் தேதி) காலை 3:49 மணிக்கு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதையடுத்து, இக்கோவிலில் குருபகவானுக்கு, லட்சார்ச்சனை நடக்கிறது. 29 ம் தேதி அதி காலை, 2:00 மணிக்கு யாக பூஜை நடக்கிறது. குருபெயர்ச்சி அதிகாலை, 3:49 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து, கலசாபிஷேகம், அலங்காரம், அபிஷேக பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.